Thursday 22 May 2008

தர்மத்தை நிலை நாட்ட தலைமுறைக் கடத்தல்

தர்மத்தை நிலை நாட்ட

தலைமுறைக் கடத்தல்

சாமியார் தொழில் என்றால் ரொம்ப லேசு என்று ஆளுக்காள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு காவித் துணி, கொஞ்சம் தாடி, ஐந்தாறு புராணக் கதை அறிவு... இப்படி இருந் தால் போதும், யார் வேண்டுமானாலும் சாமியாராகிவிடலாம் என்று மனத் தீர்த்தம் குடித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாலு தெரு சுற்றி யார் எப்போது வீட்டைப் பூட்டிக்கொண்டு போகப் போகிறார்கள் என்பதை உளவறிந்து, அடுத்த வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் வராமல் புகுந்து லவட்டிக்கொண்டு வருகிறவனுக்குத்தான் தெரியும் அந்தத் தொழில் எவ்வளவு ரிஷ்க் மிகுந்தது என்று. அதே போலத்தான் எங்கள் தொழிலில் இருக்கிற கஷ்ட நஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும்.

முதலில் முகத்தில் ஒரு அருள் மிகு தோற்றத்தைக் கொண்டுவர வேண்டும். எந்த நிலையிலும் கண்களை சாந்தமாக வைத்துக்கொண்டு, உதடுகளில் தெய்வீகப் புன்னகையைத் தவளவிட்டுக்கொண்டு, குரலில் ஒரு மென்மையைப் பரா மரித்துக்கொண்டு... எங்கே கொஞ்ச நாள் இப்படி இருந்துதான் பாருங்களேன். அப்போது தெரியும் இதற்கு எவ்வளவு பயிற்சி தேவை என்று. சினிமாவில் வருவது மாதிரியா? அதிலே சாமியார் மேக்கப் போட்டால், மூடு இருக்கிற நேரம் பார்த்து கேமரா முன்னால நடிக்கலாம், நம்ம வாய்ஸ் சரியில்லை என்றால் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து பின்னணிக்குரல் பதிவுசெய்து கொள்ளலாம். ஆனால் நிஜத்தில், பொது இடத்தில், சொந்த மடத்தில் அருள் ஒளி மாறாமல் ஷ்லோ மோஷன் தேவதை போல் நடப்பதும் நடிப்பதும் ரொம்ப ரொம்ப கஷ்டம்.

இதிலேதான், ரொம்ப ஈசி என்று எண்ணி போட்டிக் கோவில், மடம் என்று ஆரம்பித்து, அதை சரியாகச் செய்ய முடியாமல் சில போலிச் சாமியார்கள் மாட்டிக்கொள்கிறார்கள். என்ன சொல்கிறீர்கள், சாமியாராய் இருப்பதே போலிதான் என்றா? அதெல்லாம் ஆழமான சித்தாந்த வியவகாரம், அதைப் பற்றி இன்னொரு தடவை பேசலாம், இப்போது எங்கள் தொழில் பற்றிதான் பேச்சு.

நிறைய படிக்க வேண்டும். புராணம், வேதம், இலக்கியம் என்று படிக்கப் படிக்கத்தான் சாதாரணர்களிடமிருந்து மாறுபட்டுப் பேச முடியும். ஷ்வாமி எவ்வளவு ஆழமா தெரிஞ்சு வெச்சிருக்கார் என்று அந்த சாதாரணர்களிடம் பிரமிப்பு ஏற்படுத்த முடியும். அப்புறம் நன்றாகப் பேசுவதற்குப் பயிற்சி எடுக்க வேண்டும். முன் போல மகாபாரதம், ராமாயணம், பகவத் கீதை மட்டும் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. லோகப் பெரியவர் ஜார்ஜ் புஷ் ஈராக்கில் துஷ்டர்களை சம்ஹாரம் செய்தது முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் நயன்தாரா தூக்கப்பட்டது வரையில் தகவல்களில் அப்டுடேட்டாக இருக்க வேண் டும். பேச்சில் அதையெல்லாம் ஆங் காங்கே தேங்காய்த்துருவல் மாதிரி தூவ வேண்டும். நிறைய ஜோக்குகள் படித்து வைத்துக்கொண்டு அவைகளையும் ஆங்காங்கே உதிர்க்க வேண்டும். பல ஜோக்குகள் மக்கள் ஏற்கெனவே படித் திருப்பார்கள், ஆகவே புதுசு புதுசாக ஜோக்குகளும் குட்டிக் கதைகளும் சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அந்தரத்திலிருந்து விபூதி, குங்குமம், லிங்கம், மோதிரம் என்று வரவழைப்பது, அதிர்ஷ்டசாலி பக்தர்களுக்குக் கொடுப்பது, அவர்கள் மெய்சிலிர்த்திருக்க ஆசிர்வதித்துக்கொண்டே நடப்பது - இதெல்லாம் எந்தக் காலத்திலும் ஒர்க் அவுட் ஆகும்தான். ஆனால், சில பேரு ‘மந்திரமா தந்திரமா‘ என்றெல்லாம் நிகழ்ச்சி நடத்தி இது வெறும் மேஜிக் பயிற்சிதான் என்று காட்டிக்கொடுத்துவிடுகிறார்கள். உங்களையெல்லாம் பகவான் தண்டிப்பார் என்று சொன்னாலும் அவர்கள் பயப்படுவதில்லை, அவர்கள்தான் சாமியே இல்லை என்று தெளிவுபெற்ற ஆசாமிகளாக இருக்கிறார்களே!

முன்னேறுவதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது நம்முடைய மகிமையைப் பற்றி ஜனங்களிடம் பரப்புரை செய்வதற்கு ஏற்பாடு செய் வதுதான். இவர் சொன்னால் பலிக்கிறது, இவர் பேச்சைக் கேட்டால் மனம் ஆறுதல் பெறுகிறது, இவர் முகத்தைப் பார்த்தாலே நிம்மதி கிடைக்கிறது, இவர் முகத்திலேதான் என்னவொரு தேஜஸ், கண்களில் என்னவொரு கருணை, நாக் கிலே என்னவொரு அருள்... இப்படியாக வெளியே எடுத்துவிடச் செய்ய வேண்டும். இதிலே மவுத் பப்ளிசிட்டி ரொம்பவும் எஃபெக்டிவ். அதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் இன்வெஷ்ட்மென்ட் செய்யவேண்டியிருக்கும்.

மீடியாக்காரர்களை கொஞ்சம் வசப்படுத்திக்கொள்ளத் தெரிய வேண்டும். முதலில் சின்னச் சின்னதாக நம்மைப்பற்றி செய்திகள் வரச் செய்ய வேண்டும். நம் பேச்சிலிருந்து சுவையான கதைகளையும் உதாரணங்களையும் பத்திரி கைகளில் நம் படத்தோடு துணுக்குகளாக எழுதவைக்க வேண்டும். பேட்டிகள் வரவைக்க வேண்டும். அப்புறம் படிப்படியாக சில பெரிய பத்திரிகைகளில் நம்முடைய தொடர் கட்டுரைகள் வரவைக்க வேண்டும். சுவையாக எழுதினால்தான் அவர்கள் தொடர்ந்து வெளியிடுவார்கள். ஆகவே நல்ல எழுத்தாளர்களாகவும் பயிற்சி பெற வேண்டும். இதிலே வாராவாரம் நமக்கு சன்மானமும் கிடைக்கும், விளம்பரமும் கிடைக்கும், வாழும் கலை, ஆன்மீக மனவளம் அது இது என்று கேம்ப் நடத்துகிறபோது கூட்டமும் சேரும்.

சில விஷமக்கார ஜர்னலிஷ்ட்டுகள் இருக்கிறார்கள். பேட்டி என்று தோண்டித் துருவி கேள்விகள் கேட்பார்கள். ஆசிரமத்துக்குள்ளே என்ன நடக்கிறது என்று துப்பறிவார்கள். மடத்துக்கு சில பக்தர்கள் நேரில் வரும்போது அவர்களை முன்னே பின்னே பார்க்காமலே அவர்களுடைய பெயர், பிரச்சனை போன்ற தகவல்களைச் சொல்லி அசத்துகிற சாமியார்கள் உண்டு, அது எப்படி நடக்கிறது என்பதை இந்த நிருபர்கள் கண்டுபிடித்து எழுதிவிடுவார்கள். எனவே மீடியாக்காரர்களை ஜாக்கிரதையாக ஹேண்டில் செய்யவேண்டும்.

ஆனால் பொதுவாக, இன்றைக்கு மக்கள், குறிப்பாக இளைஞர்கள் புரட்சி கிரட்சி, போராட்டம் கீராட்டம் என்று வேறு பக்கம் போய்விடாமல் அணை போடுகிற கடமை தங்களுக்கும் இருக்கிறது என்பது பல மீடியா ஜாம் பவான்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர்கள் நமக்கு ஒத்துழைப்பார்கள். ஏனென்றால் அவர்களும் பெரிய கார்ப்பரேட்டுகள் தானே? ஆகையால் காம்ரேடுகள் நடத்துகிற பேரணிக்குக் குழந்தைகள் வந்தால் இப்படிக் குழந்தைகளை வதக்குகிறார்களே என்று புழுங்கியும், நம் தியான முகாம்களுக்கு பச்சைப்பிள்ளைகள் வந்தால் ஆகா இந்த வயதிலேயே என்ன பக்தி என்று எழுதி சிலாகித்தும் எழுதுவார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கு எங்களுடைய தயவும் எங்களுக்கு கார்ப்பரேட் டுகளுடைய தயவும் தேவைப்படுகிற காலம் இது. ஐடி செக்டார் உள்பட எல்லா இண்டஷஸ்ட்ரிகளிலும் தொழிலாளர்களுக்கு ஷ்பெஷல் கேம்ப் நடத்துகிறார்கள். ஆட்குறைப்பு நடந்தாலும் எஞ்சியிருக்கிற ஆட்கள் எப்படி உலகத் தரத் தில் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்று அந்த கேம்ப்புகளில் போதிக்கிறார்கள். கேம்ப்பில் கலந்து கொள்கிறவர்களுக்குப் பரிசு. இந்தக் கூட்டத்தை விட்டு விட்டு, ஃபாரின் கம்பெனிகள் நம்ம ஊரின் தொழிலாளர் சட்டங் களை மீறுவது பற்றி எச்சரிக்கும் யூனியன் கூட்டங் களுக்குப் போனால் விஆர்எ° மிரட்டல். இப்படியெல்லாம் ஒர்க்கர்° எங்களுடைய முகாம் களுக்கு வருவதை உத்தரவாதப் படுத்துகிறார் கள்.கள் நம்ம ஊரின் தொழிலாளர் சட்டங் களை மீறுவது பற்றி எச்சரிக்கும் யூனியன் கூட்டங் களுக்குப் போனால் விஆர்எ° மிரட்டல். இப் படியெல்லாம் ஒர்க்கர்° எங்களுடைய முகாம் களுக்கு வருவதை உத்தரவாதப் படுத்துகிறார் கள்.யூனியன் கூட்டங்களுக்குப் களுக்கு வருவதை உத்தரவாதப் படுத்துகிறார் கள்.

அந்த முகாம்களில் எங் களுடைய வேலை சுலபமானது என்றா நினைத்தீர் கள்? அதுதான் இல்லை. ரொம்ப ரொம்ப ஸ்கில்டு ஆக இருந்தால்தான் அந்த கேம்ப்புகளை சக்ஸஸ்புல்லாக நடத்த முடியும். யோசித்துப் பாருங்கள், இந்த உலகம் எப்படி மாயையானது என்றும் காட்ட வேண்டும்; ஆனால் மேற்படி கார்ப்பரேட் புரவலர்கள் காட்டுகிற உலகம் மெய்யானது என்றும் நாட்ட வேண்டும். போராட்டப்பாதை வன்முறையானது என்று போதிக்க வேண்டும். குஜராத் கலவரங்கள் பற்றி எது வும் தெரியாது என்று சாதிக்க வேண்டும். அரசியல் பற்றி அலட்டிக்கொள்ளாமல் கடமையைச் செய்வதே ஆண்டவனுக்குப் பிடித்த செயல் என்று ஓதிட வேண்டும். பகுத்தறிவாளர்கள் - குறிப்பாக இந்த கம்யூனிஸ்ட்டுகள் - சொல்கிற மாற்று உலகம் கானல் நீர் தான் என்று வாதிட வேண்டும்.

தொழில் நெருக்கடி என்று மற்ற துறைகளில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எங்கள் தொழிலுக்கு இதுதான் நல்ல சீசன். சந்தை நெருக்கடியால் தாக் குப்பிடிக்க முடியாத கம் பெனிகள் மூடப்படுவது ஒரு விளைவு என்றால், தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாவது இன்னொரு விளைவு. குறிப்பாக ஐடி செக்டார், பெரிய பெரிய தொழிற் சாலைகள் இங்கேயெல்லாம் பல பத்தாயிரக்கரக்கணக்கில், லட்சக் கில் சம்பளம் கொடுக்கப்பட்டாலும், அவர்கள் அடிக்கிற மொத்தக்கொள்ளையோடு ஒப்பிட்டால் அது அற்பச் சம்பளம்தான். போதாதற்கு எந்த நிமிடமும் வெளியேற்றிவிடுவார்கள், அடுத்த நிமிடத்திலிருந்தே வாழ்க்கைவசதிகள் காணாமல் போய்விடும் என்று அஞ்சியஞ்சிச் சாகிற நிலைமை. எந்த சட்டப்பாதுகாப்பும், சங்கப்பாதுகாப்பும் இல்லை என்பதால் இவர் அஞ்சாத பொருள் இல்லையே என்ற நிலைமை.

இவர்களை மூளைச்சலவை செய்து வலி தெரியாமல் அறுவை சிகிச்சை நடத்த லோக்கல் அனிஸ்தீசியா ஊசி போடுவது போல் வளா கங்களுக்குள்ளேயே மாதாமாதம் பார்ட்டி, சோமபானம், டான்ஸ், கடற்கரை ஓய்வு விடுதிகளில் வருடாந்திர மெகா கேம்ப்... என்றெல்லாம் அவர்களால் முடிந்த அளவுக்குச் செய்கிறார்கள். அந்த ஆபரேஷனை முழுசாக முடித்துத் தருகிற வேலை எங்களுடையது. ஆன்மீக சேவை செய்ததாகவும் ஆச்சு, அதிருப்திகள் அலையாக எழவிடாமல் அடக்கியதாகவும் ஆச்சு.

என்ன கேட்டீர்கள்? தலைமுறைகளை இப்படிக் கடத்துகிற எங்களுடைய சேவை மதவாத சக்திகளுக்கும் கட்சிகளுக்கும் உதவுவதாக இருக்கிறதே என்றா? இதற்குத்தான் இப்படியெல்லாம் கேட்கிறவர்களை உள்ளே விடக் கூடாது என்பது. சரி, கேட்டதற்காகச் சொல்றோம், சாதிப்பிரச்சனை இல்லாத (அதாவது கீழ்ச்சாதிக்காரர்கள் ஆவேசக் குரல் எழுப்பாத), பண்பாடு குலை யாத (அதாவது பெண்கள் உரிமை பேசாத), பொருளியல் மயக்கம் இல்லாத (அதாவது சுரண்டல் பற்றி அலட்டிக்கொள்ளாத) ஒரு ஆன்ம நேய சமூ கத்தை உருவாக்க அந்த சக்திகள்தான் துணை செய்கின்றன. அவர்களுக்கு நாங்கள் இந்த உதவி கூட செய்யக்கூடாதா?

எங்களுக்கு இருக்கிற ஒரே தலைவலி சில நல்ல சாமியார்கள்தான். மடத்திலிருந்து பூசை செய்தோமா, கதாகாலட்சேபம் செய்தோமா என்று இருக்காமல், மோதல்கள் நடக்கிறபோது மக்களைச் சந்தித்து பகைமை வேண்டாம் என்று அறிவுரை சொல்கிறவர்கள் அவர்கள். உலகமயமும் தனியார்மயமும்தான் மனிதர்களின் சிக்கல்களுக்குக் காரணம் என்றும் பேசுகிறவர்கள் அவர்கள். என்ன பண்றது, தொழில் என்று வந்துவிட்டால் இப்படிப்பட்ட சவால்களையும் சந்தித்துதானே ஆக வேண்டும்.

எப்படியோ, சிக்கல்களை தாராளமயமாக்குகிற அரசுகள் இருக்கிற வரை, மக்களின் குழப்பங்கள் நீடிக்கிற வரையில், தெளிவானவர்கள் செல்வாக்குப் பெறுகிற வரையில் எங்கள் பிசினெஸ் தங்கு தடையில்லாமல் நடந்துகொண்டிருக்கும்.