Sunday 30 December 2007

புத்தாண்டு வாழ்த்துதான்...

எல்லா வளமும் பெற்று
இன்புற்று வாழ்ந்திட
கடக்கும் ஆண்டின்
தொடக்கத்தில் வாழ்த்தியது
நினைவுக்கு வருகிறது.
கணக்கெடுப்பில் மனம்
கசந்து தொய்கிறது.
உன் கர்ப்பத்தில் நீ
என்ன வைத்திருக்கிறாய்
புத்தாண்டே?
புதிர்கள் நிமிடங்களுக்கு
புத்துணர்ச்சியூட்ட
உன் ஒரு வல்லமையை
மறுப்பதற்கில்லை.
நம்பிக்கையை விதைக்கும்
அந்த வல்லமை.
வாழ்த்துவோருக்கும்
வாழ்த்தப்படுவோருக்கும்
நம்பிக்கை.

-அ.குமரேசன்

Sunday 23 December 2007







கலைகளோடு கேள்விகளும் சங்கமம்






ந்த ஆண்டின் துவக்கத்தில் நடந்த ‘சென்னை சங்கமம்’ பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் உண்டு என்ற போதிலும் அது எதிர்பார்க்கப் படுகிற ஒரு வருடாந்திர கலை விழாவாகியிருக்கிறது என்பதை மறுப் பதற்கில்லை. அந்த நிகழ்வு பற்றிய பல விமர்சனங்கள், அது முழுமை யாகத் தமிழ் நாட்டுப்புறக் கலைகளை ஊக்குவித்து வளர்ப்பதாக அமைய வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே வந்தன. சிலர், அவர்களைத் தவிர வேறு யார் எதைச் செய்தாலும் அதெல்லாம் போலியானது என்று முகம் திருப்பிக் கொண்டேதான் இருப்பார்கள். சென்னை சங்கமத்தைப் பொறுத்தவரையில் அதனை நடத்துவது தமிழ் மையம் அமைப்புதான் என்றபோதிலும், அரசாங்கத்தின் நிதி மற்றும் நிர்வாகப் பங்களிப்பும் ஓரளவு இருப்பதால், மக்கள் பணம் கொஞ்சம் அதற்காகத் திருப்பி விடப்படுகிறது என்பதால், கூடுதல் கண்காணிப்புக்கும் கேள்விகளுக் கும் உட்படுத்தப்படுவது இயல்பே.






அந்த இயல்பிலிருந்தே, ‘சென்னை சங்கமம் 2008’ அறி விக்கப் பட்டபோது வரவேற்பு, எதிர்பார்ப்பு, ஐயப்பாடு, மதிப்பீடு என எல்லா உணர்வுகளும் சேர்ந்து மேலெழுகின்றன. தமிழ் மையம் இயக்குனர் களில் ஒருவரும் சங்கமம் ஒருங்கிணைப்பாளருமான நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, டிச.7 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஜனவரி 10 முதல் 17 வரை `சென்னை சங்கமம் 2008’ நடைபெற இருப் பதை அறிவித்தார். இயற்கைக்கு நன்றி தெரிவிப்பதோடும் இணைந்த பொங்கல் விழாவை யொட்டி இந்தப் பண்பாட்டுச் சங்கமம் நடைபெற உள்ளது என்றார் அவர்.






அடிப்படையில் பிழைப்புக்காகவும், புதிய வாய்ப்புகளுக்காகவும் தலைநகர் வந்து சேர்ந்தவர்கள்தான் சென்னையின் பெரும்பாலான மக்கள். நகரத்தின் ஓட்டத்தில் பொங்கு நுரை போல் வாழ்க்கை மிதக் கிறது. எனவே, தங்களது வேர்களோடு அடையாளப்படுத்திடும் தேடலும் ஏக்கமும் அடியுணர்வாய் இருக்கிறது. விழாக்கால விடு முறைகள் வருகிற போது, சிறப்பு ரயில்கள், கூடுதல் பேருந்துகள் என்று இயக்கினாலும் போதவில்லை என்கிற அளவுக்கு குடும்பம் குடும்பமாகச் சொந்த ஊர்ப் பயணம் மேற்கொள்ளப்படுவதன் அடிப்படை இதுதான். இன்னொரு பக்கம், அப்படியெல்லாம் பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய, தாங்கமுடியாத பணச் செலவு என்பதாக, ஆகப் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். வேலை நிலைமை உள்ளிட்ட வேறு பல கார ணங்களாலும் இங்கேயே இருக்க வேண்டியவர்கள் நிறையப்பேர். கிராமங்களில் வாழ்வாதாரத்தைப் போலவே வாய்ப்பாதாரமும் நசிந்து போன வர்களாக சலங்கை கட்டிய கால்களின் பழைய நினைவு உறுத் தல்களோடு ஏங்கிக் கிடக்கும் நாட்டுப்புறக் கலை ஞர்களும் ஏராளமாக உள்ளனர். நகர மக்களின் வேர்த் தேடலும், கிராமத்துக் கலைஞர்களின் வெளிச்ச ஏக்கமும் சங்கமிக்கிற ஒரு நிகழ்வாக சென்னை சங்கமம் உருவாகிறது எனலாம்.






முதல் சங்கமத்தைப்போலவே 2008ம் ஆண்டிற்கான சங்கமமும் பூங்காக்கள், வெளி யரங்குகள் போன்ற இடங்களில் நிகழவிருக்கிறது. அதில் சுமார் 725 கலைஞர்கள் பங்கேற் றார்கள். இப்போது 1600 கலைஞர்கள் பங்கேற்கிற சுமார் 60 கலை வடிவங்கள் இடம் பெறுகின் றன. பறையாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கரகாட்டம், களிய லாட்டம், கொக்கிலிக்கட்டை, மான் கொம்பாட்டம், வில்லுப்பாட்டு, நையாண்டிமேளம், மாடாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கணியான் கூத்து, செண்டை, பாவைக்கூத்து, தேவராட்டம், கடவு மாத்தாட்டம், பொம்மலாட்டம், களரி, சிலம்பம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மெரினா கடற் கரைச் சாலை, பெரம்பூர், தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் சங்கமப் பெரு வளா கங்களும் அமைக்கப்படுகின்றன.சென்ற முறை கிடைத்த அனுபவங்கள் அடிப் படையில், குறைபாடுகளை தவிர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் கனிமொழி. புதிதாக என்ன செய்யப்படு கிறது? இம்முறை நாட்டுப்புற கலைகளில் பயிற்சி பெற்ற நகர்ப்புற பள்ளி - கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இத்துடன் இணை கின்றன. இதுவும் ஒரு ஆக்கப்பூர்வமான சங்கமம் என்றுதான் சொல்ல வேண்டும்.






செய்தியாளர்கள் முன்னிலையில் கல்லூரி மாணவிகள், பள்ளிக் குழந்தைகளும் தங்களது பயிற்சியை உற்சாகம் பொங்க வெளிப்படுத் தியபோது, நாட்டுப்புற கலை வளர்ச்சிக்கான இன்னொரு முனைப்பின் அடையாளங்கள் தெரிந்தன. தமிழ் மையத்தின் 15 பயிற்சியாளர்கள் கடந்த 6 மாதங்களில் 20க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களுக்குச் சென்று 10 விதமான நாட்டுப்புற கலை வடிவங்களை கற்பித்திருக்கிறார்கள் என்று மையத்தின் மற்றொரு இயக்குநர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார்.






இப்போதும் முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் சுதா ரகுநாதன், அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமண்யன், டி.வி.சந்தான கோபாலன், டி.எம். கிருஷ்ணா, சௌம்யா, ரஞ்சனி - காயத்ரி போன்றோரும் `அவிக்னா’ போன்ற பரத நாட்டியக் குழுக்களும் வெளியரங்குகளில் தமது கலைகளை மக்கள் முன் வழங்க இருக்கிறார்கள்.






சங்கமத்தில் பங்கேற்க விரும்பும் புதிய கலைஞர்கள் இம்மாதம் 26, 27 நாட்களில் பிற்பகல் வரையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய பள்ளி அரங்கில் நடைபெறவுள்ள நேரடி தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சங்கம நிகழ்ச்சிகளில் பங் கேற்கலாம் என்றும் அமைப் பாளர்கள் கூறினார்கள்.மாணவர்கள், இளையவர்களுக்கான நடனப் போட்டி ஒன்றும் முக்கிய அம்சமாக இடம் பெறுகிறது. ஜனவரி 11 அன்று இந்தப் போட்டி உயர் நிலைப் பள்ளி, மேநிலைப் பள்ளி, இளநிலைக் கல்லூரி என பிரிவு களாக நடத்தப்படும். ஜனவரி 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டிகள் பங்கேற்பவர்கள் திரைப்படப் பாடல்களை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டுப்புற பாடல்கள் தேவை எனில் தமிழ் மையம் அலுவல கத்தை ( 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர்) தொடர்பு கொள்ளலாம்.






சென்ற முறை போலவே தமிழ்நாடு இயல் - இசை - நாடக மன்றத்தின் சார்பில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவியரங்குகள், பட்டிமன்றங் கள், இலக்கிய உரைகள், கலை விவாதங்கள் ஆகியன நிகழும் களமாக தமிழ்ச் சங்கமம் அமையும் என்றார் மன்றத் தின் செயலர் கவிஞர் இளையபாரதி.






கேரளத்தின் மாப்ளா இசை, ராஜஸ்தானி நடனம், சூஃபி இசை, கர்நாடகத்தின் நித்யகிரம் போன்ற சில வெளிமாநில கலை நிகழ்ச்சிகளும் இம்முறை சங்கமிக்கின்றன.






சென்றமுறை நிகழ்ச்சிகள் நடந்த இடங்களில் பார்வை யாளர்களுக்கு உணவு கிடைப்பது ஒரு பிரச்சனை யானது. அதை மனதில் கொண்டு இம்முறை உணவு விழா என்பதும் இந்த சங்கமத்தில் இணைகிறது. நெல்லையின் இருட்டுக் கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, தலப்பாகட்டி பிரி யாணி, மதுரையின் ஜில் ஜில் ஜிகர்தண்டா, நாட்டுக் கோட்டை பலகாரங்கள் போன்ற வட்டார உணவுகள் அந்தந்தப் பகுதிகளிலிருந்தே வரவழைக்கப்படுகின்றன. சென் னையின் முன்னணி சமையல் வல்லுநர்கள் அவற்றை ஆரோக்கியமான முறையில், எளிய தள்ளுவண்டிகளிலேயே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் என்று ஹாட் பிரட்ஸ் நிறுவனத்தின் மகாதேவன் தெரிவித்தார்.






நாட்டுப்புற கலைகள் பாதுகாப்பு என்பதில் அவற்றை எந்த மாற்றமுமின்றி அப்படியே வைத்திருப்பது, காலத்திற்கேற்ற மாற்றங்களைச் செய்வது என்ற இரண்டு அணுகு முறைகள் உண்டு. சமூக நீதி, சமூக சீர்த்திருத்தம் போன்ற தமிழக அரசின் கொள்கைகள் சங்கமத்தின் செய்தியாக ஏன் அமையக் கூடாது?






``கலைகளில் மாற்றமே கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆயினும் கலைஞர்கள் அவர்களது விருப்பப்படி நிகழ்த்துவதற்கு சுதந்திரம் உண்டு. அதில் நாங்கள் குறுக்கிடவில்லை சென்ற முறை கூட பல கலைஞர்கள் முற்போக்கான செய்திகளைப் பாடல்கள் மூலம் சொல்லவே செய்தனர்.’’ என்றார் கனிமொழி.






கலைஞர்களின் பொருளாதாரம், மக்களின் ஈடுபாடு ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட இந்த மாபெரும் நிகழ்வை, அரசுத்துறைகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களைத் தாண்டி, மக்களுக்கான கலை இலக்கியத்தை அக்கறையும், ஈடுபாடும் உள்ள அமைப்புகளோடும் இணைந்து நடத்தினால் என்ன? இதைப்பற்றி கேட்டபோது, மற்ற கலை அமைப்புகள் தாங்களாக முன் வருவார்களானால் தாராளமாகப் பங்கேற்கலாம் என்று பொதுவாகச் சொல்லப் பட்டது. அத்தகைய அமைப்புகளை இவர்களாக அணுகுகிற விருப்பம் இல்லை போலும். ஏனிந்தத் தயக்கமோ? எனினும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்ச்சங் கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று இளைய பாரதி கூறினார். பங்கேற்பாளராக அழைக்கப்படுவதற்கும், அமைப் பாகவே இணைந்து செயல்படுவதற்கும் வேறுபாடு இருக்கவே செய்கிறது.






இதேபோன்ற கலை இலக்கிய முயற்சிகளை மற்ற அமைப்புகள் மேற்கொண்டால் அதற்கும் அரசுத் துறை களில் ஆதரவு இதேபோல் கிடைக்குமா என்ற கேள்வி இப்போதும் தொடர்கிறது. சென்ற சங்கமத்திற்குப் பிறகு, நாட்டுப்புற கலைஞர்களின் உண்மையான ஆதங்கம் வெளிப்படுத்தப்படவில்லை என்ற உணர்வோடு சென்னையில் தமுஎச நடத்திய பேரணியும், அதன் தொடர் விளை வாக தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தை அமைத்ததும் நினைவுக்கு வருகிறது. அத்தோடு இன்னும் அந்த வாரியத்தின் முதல் கூட்டம் கூட கூட்டப்படவில்லை என்பதும் நினைவுக்கு வருகிறது!






அடுத்தடுத்த நிகழ்வுகளின் அனுபவ சங்கமத்தில் புதிய அணுகுமுறைகள் உருவாகட்டும் கலையும் இலக்கிய மும் மக்களுக்கே என மறுபடி மறுபடி உறுதியாகட்டும்.

Sunday 16 December 2007

மசியல்

நலம் தரும் போக்குவரத்து மசியல்

போக்குவரத்து மசியல் - அதுதாங்க டிராபிக் ஜாம் - இப் போதெல்லாம் ரொம்பவும் சர்வ சாதாரணமாகிவிட்டது. சென்னை போன்ற நகரங்களில், சாலைகள் சந்திக்கும் இடங்களில் கண்டிப் பாக அந்த மசியலைச் சந்திக்க வேண் டியிருக்கிறது. அந்த இடங்களில் எல்லாம் புலம்பல்களும் வசவுகளும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர, ஆறு சக்கர, பல சக்கர வாக னங்களோடு சேர்ந்து உறுமலாய் வெளியாகிக் கொண்டே இருக்கின் றன.
“ஒவ்வொரு சிக்னல்லயும் இப்படி நிக்க வேண்டியதாப் போச்சே,” என் கிறார் ஒருவர். “அந்த சிக்னல்ல தப்பிச்சு இங்கே வந்து மாட்டிக் கிட்டேன்,” என்கிறார் இன்னொருவர். இந்த வசனங்களை முன்னால் நிற் கும் ஒரு வண்டி, அதன் புட்டத்தில் முத் தமிடுவது போல் நிற்கும் அடுத்த வண்டி, அடுத்தடுத்த வண்டி என எல்லா வண்டிகளின் ஓட்டிகள், பயணிகளும் நீக்கமற உச்சரிக்கிறார்கள்.
“பாலங்கள் நிறைஞ்ச ஊர், பூங்காக்கள் நிறைஞ்ச ஊர், யுனிவர்சிட்டி நிறைஞ்ச ஊர், கோயில் நிறைஞ்ச ஊர் ... இப்படி மற்ற மாநிலங்கள்ல இருக் கிறவங்க பெருமைப்பட்டுக்கிடுறாங்க. நம்ம சென்னை என்னடான்னா சிக்னல்கள் நிறைஞ்ச ஊரா இருக்கு,” என்று அந்த இடுக்கண் நேரத்தில் நகு வதன் மூலம் ஒருவர் தன் துயரம் மறக் கப் பார்க்கிறார்.
“என்னப்பா இது, ஓடுற நேரத்தை விட நிக்கிற நேரம்தான் அதிகமா இருக்கு.” ... “என்னை என்ன சார் செய் யச் சொல்றீங்க?” ... “உன்னை ஒண் ணும் சொல்லலப்பா, இப்படி நிக்கிற நேரத்துக்கும் சேர்த்து உனக்கு நான் காசு கொடுக்கும்படியா ஆக்கிட்டாங் களே, அதை நெனைச்சுப் பார்த்தேன்.” ... “உங்ககிட்ட வாங்குற காசு இப்படி நிக்கிற நேரத்தில வே°ட்டாகிற பெட் ரோலுக்கே சரியாப் போயிடுதே, அதைத்தான் சார் நான் நெனைச்சுப் பார்க்கிறேன்.”- இது ஒரு ஆட்டோ பய ணிக்கும் அதன் ஓட்டுனருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை என விளக்க வேண்டியதில்லை.
“யாருதான் கார் வாங்குறதுன்னு ஒரு தராதரமே இல்லாமப் போச்சு. டிபார்ட்மென்ட் லோன், பேங்க் கிரெடிட், ஃபைனான்° எல்லாம் கிடைக்குதுன்னு அவனவனும் கார் வாங்குறான்.” -ஒரு காரோட்டி தன் பக்கத்தில் அமர்ந் திருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார். ‘இவரே லோன் மேளாவில் கார் வாங் கினவர்தானே... ஒரு ஓசி டிரிப் அடிக்கலாம்னு இவர் வண்டியில வந்தா, அடுத்த மாசம் நாமளும் லோன் போடலாம்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப இப்படிப் பேசுறாரே.’ -பக்கத்து சீட் பயணியின் மனதில் இவ்வாறாக ஓடுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்த கடுப்பில் ஒருவர் தனது வண்டியை சற்றே கிடைத்த இடைவெளியில் புகுத்த, “அவ னுக்கு ஏதாவது அறிவிருக்கா பாரு” என்கிறார், சில நிமிடங் களுக்கு முன் இதே போன்ற பாராட்டுக்கு இலக்கான இன்னொருவர்.
ஒருவர் கொஞ்சம் அத்துமீறி, “பொம்பளைங்க எல்லாம் பைக் ஓட்ட வந்துட்டாங்க, அப்புறம் ஏன் டிராபிக் ஜாம் ஏற்படாது,” என்று மொழிகிறார். அவருடைய பார்வையின் திசையில் தன் சினேகிதியுடன் இரு சக்கர வண்டியில் நின்று கொண் டிருக்கும் ஒரு சுடிதார் பெண் திரும்பிப் பார்த்து முறைக்க இவர் கப்பென்று வாயை மூடிக்கொள்கிறார்.
சாலைச் சந்திப்பின் குறுக்கே சென்ற வாகனங்கள் ஒரு வழியாகக் குறைய, அனுபவஸ்தர்கள் உடனே தமது வண்டிகளைக் கிளப்புவதற்குத் தயாராக சீற்ற நிலைக்குக் கொண் டுவருகின்றனர். சிவப்பு விளக்கு அணைவதற்கு முன்பே, குறுக்குச் சாலையில் கடைசி வாகனங்கள் கடந்து முடிவதற்கு முன்பே கிளம்புகின்றனர். அனுபவமற்றவர்கள், பச்சை விளக் குக்காகக் காத்திருந்து, பின்னால் இருப்பவர்களின் ஆரன் எரிச்சலுக்கு உள்ளாகிறார்கள். அது வரையிலான புலம்பல்கள் முடிந்து வண்டிகள் பாய்ந்து பறக்கின்றன. சொற்ப நேரத்தில் சிவப்பு சிக்னல் விழ, மறுபடி வண்டிகள் தேக்கம். மறுபடி புலம் பல்கள். சலிப்புகள். மறுபடி கிண்டல்கள். மறுபடி வசவுகள்.
ஆனால், சாலைச் சந்திப்புகளின் போக்குவரத்துத் தேக்கம் குறித்து கவலைப்படவோ, இப்படிப் புலம்பித் தீர்க்கவோ தேவை யில்லை என்றே தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால், வண் டிகள் இப்படித் தேங்கி நிற்பதால் நன்மைகளே அதிகம்! மிகை நாடி மிக்க கொளலே சாலவும் நன்று என்பதால், கஷ்டங் களையும் நஷ்டங்களையும் விட, ஆதாயங்களே மிகுதி என்ற நிலையில் டிராபிக் ஜாம் வரவேற்கத்தக்கதே.
முதலில், நீங்கள் என்னதான் முண்டினாலும், ஊர்ந்திடும் அவ்வளவு வாகனங்களின் இடுக்குகளில் உங்களால் வேகமாக உங்கள் வண்டியைச் செலுத்த முடியாது. சாலைச் சந் திப்புகளில்தான் சிக்னல் விழுவதற்குள் கடந்துவிட வேண்டும் என்ற வேகம் பிறக்கிறது. ஆகவே, சிவப்பு சிக்னலால் ஏற் கெனவே நின்று கொண்டிருக்கிற ஏகப்பட்ட வண்டிகளின் புறத்தே உங்கள் வண்டி நிற்கிற போது, வேகமாகக் கடக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களைக் கடந்து சென்றுவிடும். ஆகவே உங்கள் வண்டியோ நீங்களோ விபத்துக்கு உள் ளாகிற வாய்ப்பு குறைகிறது.
இந்த செல்போன் யுகத்தில், உங்கள் வண்டி வேகமாகச் செல்லும்போது சரியாக டவர் சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் சரியாகப் பேச முடிவதில்லை. இப்போது வாகனங் களின் நெருக்கடி காரணமாக நீங்கள் வெகுநேரம் நிற்க வேண் டியவதால், அந்நேரத்தில் செல்போன் வழியாக பேச வேண்டியதைப் பேசிவிடலாம். இதை மனதில் வைத்துதானோ என்னவோ எல்லா சாலைச் சந்திப்புகளிலும் டவர் சிக்னல் கிடைக்க தொலைபேசிக் கம்பெனிகள் ஏற்பாடு செய் திருக்கின்றன.
காத்திருக்கும் நேரத்தில், பக்கத்து வண்டிக்காரரிடம் “எந்தப் பக்கம் போனாலும் இதே ரோதனையாப் போச்சு,” என்று கூறுகிறீர்கள். “அதை ஏன் கேட்கிறீங்க, இப்ப எல்லாம் லீவு நாள்ல கூட கூட்டம் ஓய மாட்டேங்குது,” என்று அவர் பதிலளிக்கிறார். அவர் எந்த ஏரியா என்று விசாரிக்கிறீர்கள். உங்கள் ஏரியாதான் என்று தெரிய வருகிறது. உங் களுக்கிடையே ஒரு புதிய நட்பு மலர்கிறது. வண்டியை நிறுத்தாமல் போய்க்கொண்டே இருந்திருந்தால் இது நடந்திருக்ககுமா?
என்னதான் நீங்கள் வேலை முடிந்து ஆவலாக வீட்டுக்குப் போனாலும், அங்கே போய் சிறிது நேரத்தில் ஏதாவது அற்பப் பிரச்சனையில் சண்டை வரத்தான் போகிறது. டிராபிக் ஜாம் காரணமாக வீட்டிற்கு லேட்டாகப் போகும்போது, சாப்பிட்டோமா, கொஞ்சம் டிவி பார்த்தோமா, கண் செருகத் துவங்கியதும் படுக்கையில் சாய்ந்தோமா என்றுதான் உங்கள் “மூட்” அமையும். சண்டைக்கான காரணத்தைத் தேடுவதற்குக் கூட நேரம் கிடைக்காது.
வீட்டை விடுங்கள். வேறு யாருடனாவது சண்டை போடுவதற்குக் கூட நீங்கள் கோபமாகப் போய்க் கொண்டிருக்கலாம். டிராபிக்கில் நிற்கிற போது, அந்த எரிச் சலில் உங்கள் மன எரிச்சல் வடிகட்டப்பட்டுவிடும். இரண்டு நெகட்டிவ் சேர்கிற போது ஒரு பாசிட்டிவ் ஆகிவிடும் என்ற கணித சாஸ்திரப்படி இரண்டு கோபங்கள் சேர்ந்து சமன மாகும் போது உங்களுக்கு ஒரு பரிபக்குவ மனம் கிடைக் கிறது. கோபத்தால் ஏற்படும் உடல் உபாதையும் கரைந் துவிடுகிறது.
அதே போல், ஏதோ ஒரு ஏமாற்றத்தில், அல்லது யார் மீதோ உள்ள ஆத்திரத்தில் உங்களை நீங்களே கொலை செய்வது என்ற முடிவுடன் அதற்கு வசதியான இடம் தேடித் தான் புறப்பட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்போது போக்குவரத்து நெரிசலும் தேக்கமும் உங்களை மறு சிந்தனைக்குத் தூண்டும். நீங்கள் தற்கொலை முடிவைக் கைவிடுவீர்கள்.
காலையில் புறப்படும் போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கினால், உரிய நேரத்திற்குள் உங்கள் அலு வலகத்திற்கோ, வேறு இடங்களுக்கோ போய்ச்சேர முடியாது என்பதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருப்பீர்கள். ஆகவே வழக்கமான நேரத்தை விட முன்னதாகப் புறப்படுகிற பழக்கமும், அதற்காகப் படுக்கையில் இருந்து சீக்கிரம் எழுகிற பழக்கமும் உங்களைத் தொற்றிக் கொள்ளும். பாருங்கள், உங் கள் அம்மா அப்பா எப்படியெப்படியோ சொல்லியும் பாடமாகாத ஒரு பழக்கம் இப்போது உங்கள் நடைமுறையோடு படிந்தேவிடுகிறதே!
பச்சை சிக்னல் கிடைக்க நேரம் ஆகும் என்ற பட்டறிவால் உங்கள் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைப்பீர்கள். இத னால் உங்கள் பெட்ரோல் செலவு வெகுவாகக் குறையும். எரி பொருள் சிக்கனம் தேவை இக்கணம் என்பதால், நீங்கள் இன்ஜினை நிறுத்துவதன் மூலம் ஒரு தேசபக்தக் கடமையை நிறைவேற்றிய பெருமை உங்களைச் சேரும். உங்களைப் பார்த்து மற்றவர்களும் தங்களுடைய வண்டிகளை ஆஃப் செய்வார்கள். இதனால், தேசபக்தியைப் பரப்பிய புண்ணியம் உங்களை வந்து சேரும்.
சாலைச் சந்திப்பில் நிற்கும் வண்டி, பச்சை சிக்னல் விழுந்ததும் உடனே புறப்பட ஏதுவாக ட்யூன் செய் யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக நீங்கள் கண்டிப்பாக ஒரு மெக்கானிக்கிடம் வண்டியைக் கொடுப்பீர்கள். அவர் தம்மிடம் பணியாற்றும் இளம் மெக்கானிக்குகளிடம் வேலையைக் கொடுப்பார். பார்த்தீர்களா. டிராபிக் ஜாம் இப்படி பலரது வேலையின்மைப் பிரச்சனைக்குத் தீர்வாகிறது!
இப்படியாக இன்னும் பல நற்பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் எண்ணிப் பார்த்து, இனி போக்குவரத்து நெருக்கடி நேரங்களில் இறும்பூதெய்துங்கள். முடிந்தால் நீங்களே கூட டிராபிக் ஜாம் ஏற்படுத்த முயன்று, பலரது மனம் பக்குவம் அடைய வழி கோலுங்கள்.
அரசாங்கத்துக்குக் கூட நன்மை இருக்கிறது. வண்டிகள் நகர முடியாமல் ஊர்ந்து கொண்டிருக்கும்போது, சந்திப்புகளில் நின்றுகொண்டிருக்கும் போது, பலர் எதிர்காலத்தில் இப்படி ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனைகளை வழங்குவார்கள். எங்கே பாலம் கட்டலாம், எந்தப் பாலத்தை இடித்துவிடலாம், எந்தச் சாலையை ஒருவழிப் பாதையாக்கலாம், எத்தனை வண்டிகளுக்கு லைசென்ஸ் ரத்துச் செய்யலாம் (அவர்களது வண்டிகள் தவிர்த்து), எந்த அதிகாரியை மாற்றலாம், யார் யாரை எல்லாம் நிற்க வைத்துச் சுடலாம் .......... என்று எத் தனையோ யோசனைகளை அள்ளி வீசுவார்கள். உலகத்தில் எங்கெங்கே பக்காவான சாலைப் போக்குவரத்து மேலாண்மை இருக்கிறது என்ற பொது அறிவுத் தகவல்களையும் குவிப்பார்கள். அரசாங்கம் இந்த யோசனைகளை எல்லாம் திரட்டினால், உண்மையாகவே போக்குவரத்து நெருக்கடிச் சிக்கலைத் தீர்க்கக் கூடிய ஒரு உருப்படியான திட்டத்திற்கு வழி பிறக்கக்கூடும்.
சில பேர் ரொம்ப சீரியஸாக, பொதுத்துறைப் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதுதான் சரியான தீர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது ஏசி பஸ்களும் டீலக்ஸ் பஸ்களும் அல்ல, கூட்ட நெருக்கடிக்கும் பிக்பாக்கெட்காரர்களின் கைங்கர்யத்திற்கும் இடமில்லாமல் சாதாரண பஸ்களையே போதுமான அளவுக்கு விட்டாலே போதும் என்பார்கள். பணிமனைகளில் முடங்கிக் கிடக்கும் பேருந்துக ளுக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என்று சொல்வார்கள். போதுமான தொழிலாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இதுவரை போக்குவரத்துத் துறை பின்னுக்குப் போனது ஏன், முறைகேடுகள் ஏதேனும் உண்டா என்று ஆராய அறிவுறுத்துவார்கள். இன்னும் ஒரு படி மேலே போய், பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே குடியிருப்புகள் அமைக்கப்படுவது, எல்லாப் பகுதிகளிலும் சீரான தரமான அரசுப்பள்ளிகளை அமைப்பது ... போன்ற மாற்றுத் திட்டங்களையும் கூட முன் மொழிவார்கள்.
அவர்கள் வேண்டுமானால் சீரியஸாக இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கட்டும். அரசாங்கமோ, அமைச்சகமோ, அதிகாரிகளோ இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் இப்படிப்பட்ட மாற்றுக் கொள்கையைச் சொல்வது, மக்கள் காதுகளில் கேட்காமல் இரைச் சல்கள் எழுப்புவதற்குத்தான் பூசைகள், மதவாதக் கூச்சல்கள், யாராவது நடிகை ஏதாவது செய்ய அதற்கு எதிராகக் கிளப்பப்படும் கூப்பாடுகள், அவற்றையெல்லாம் பெரிதுபடுத்துகிற ஊடகங்கள் என்று என்னென்னவோ இருக்கின்றனவே.

Sunday 9 December 2007

விவாதம்

கால்மேல் கால் போட்டால்
கடவுளுக்கு அவமதிப்பா?

லத்தையே காப்பாற்றும் கடவுளுக்கு இப்போதெல்லாம் ரொம்பவும்தான் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது போலிருக்கிறது. ஆளுக்காள் கடவுளைக் காப்பாற்ற அவதாரம் எடுப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. பாவம் கடவுள், அவர் படைத்த அற்ப மானிடர்களின் தயவால்தான் அவரே மண்ணில் இடர் நீங்கி நிம்மதி பெற வேண்டியிருக்கிறது. கடவுளுக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்காமல் விட மாட்டேன் என்று சிலர் கிளம்புவதைப் பார்க்கும் போது, தாங்கள் கடவுளை விட சக்தி வாய்ந்தவர்கள் என்று உலகத்தார்க்குத் தெரிவிக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. தப்பித் தவறி கடவுள் என்றொரு சக்தி எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாக இருப்பதாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். அந்தக் கடவுளின் கவுரவத்தைக் காப்பாற்றுவதாய் மனிதப் பதர்கள் தொடை தட்டுவது, அந்தக் கடவுளின் சுயமரியாதைக்கு எவ்வளவு பெரிய அவமானம்!

ஆனால், திரைப்பட நடிகை குஷ்பு கடவுளை அவமதித்துவிட்டாராம். எப்படி அவமதித்தாராம்? அலங்கரிக்கப்பட்ட ஒரு அம்மன் சிலை. அதன் முன்பாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் குஷ்பு. செய்யலாமோ? அதுவும் எப்படி? அம்மனுக்கு முதுகு காட்டிக் கொண்டு! அதுவும் எப்படி? கால் மேல் கால் போட்டுக் கொண்டு! அதுவும் எப்படி? செருப்புக்காலோடு! - இப்படியொரு புகைப்படம் பத்திரிகைகளில் வந்தது. அவ்வளவுதான் வந்தது ஆவேசம் ஆன்மீகக் காவலர்களுக்கு.

அய்யய்யோ கடவுளுக்கு அவமதிப்பு என்று கூச்சலிட்டார்கள். குஷ்பு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அறிக்கைகள் விடுத்தார்கள். அவரை அலைக்கழிக்கும் நோக்கத்தோடு ஆங்காங்கே நீதிமன்றங்களில் அவர் மீது வழக்கு கள் தாக்கல் செய் திருக் கிறார்கள். கரு ணையே வடி வானவர் கடவுள் என்று என்றும் இவர் கள் தான் கதாகாலட்சேபங்களில் உபந் நியாசம் செய் கிறார்கள்!

இத்தனைக்கும் அது “நிஜமான” கடவுள் சிலை அல்ல. அது, கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும், தினமும் பூசைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சாமி அல்ல. ஏதோ ஒரு திரைப்படத்தில் இடம் பெறுகிற தற்காலிக சிலை அது. அதன் முன்னால் குஷ்பு உட்கார்ந்து பேசுவது அந்தப் படத்தில் இடம் பெறுகிற காட்சி.

ஆக, சினிமாவில் தோன்ற சான்ஸ் கிடைத்த சாமிக்கு முன் நடிகை இப்படி செருப்போடு கால் மேல் கால் போட்டுப் பேசியதால், கடவுள் பாதுகாப்புப் படையினர் இப்படி வெறுப்போடு வழக்கு மேல் வழக்குப் போடுகிறார்கள். அந்தப் படத்தை வெளியிட்ட பத்திரிகை மீதும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். முன்பு கற்புக் காவலர்கள் வழக்குகளால் குஷ்புவை அலைக்கழிக்க முயன்றார்கள். இப்போது கடவுட் காவலர்கள். இவர்களைப் பொறுத்த வரையில், சிலையின் முன் செருப்புக் காலோடு உட்கார்ந்தவர் குஷ்பு என்பதைத்தான் முக்கிய விவகாரம். ஒரு இஸ்லாமியப் பெண் இப்படி இந்துச் சாமியை அவமதிப்பதாவது...

யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்ற மன உளைச்சலுக்கு ஆளாகிற பேர்வழிகள், யாராவது பிரபல புள்ளி மீது வழக்குத் தொடுத்து விளம்பரம் தேடுவது அடிக்கடி நடப்பதுதான். தமிழ்நாட்டில் ராமன் பெயரைச் சொல்லியும் போணியாகாத மதவெறிக் கலாச்சாரத்தை, இந்த விளம்பரத்தின் மூலமாகவாவது மக்கள் தலையில் கட்ட முடியுமா என்று முயன்று பார்க்கிறார்கள்.

கால் மேல் கால் போட்டு உட்கார்வது என்பது உடல் சார்ந்த வசதி சம்பந்தப்பட்ட பழக்கம். அவ்வாறு உட்கார்வது அதிகாரத்தின் வெளிப்பாடாக, அந்த°தின் அடையாளமாகச் சித்தரிப்பது பண்பாட்டு அபத்தம். பெரியவர்கள் முன் சிறியவர்களும் ஆண்களின் முன் பெண்களும் கால் மேல் கால் போட்டு உட்கார்வதை ஆணவச் செயலாகக் கூறுவது ஒரு பண்பாட்டு அடக்குமுறை. உடலின் இயல்பான தேவையைப் பண்பாட்டின் பெயரால் சிறுமைப்படுத்துவது அநாகரிகம்.

செருப்புக் காலோடு அமர்வது என்பதும் அந்தந்த இடம் சார்ந்த தேவையைப் பொறுத்தது. கோயில் வாசலில் செருப்பைக் கழற்றிவைத்து உள்ளே சென்று, பூசையின் போது கடவுளை நினைக்க மாட்டாமல் செருப்புக்கு என்ன ஆனதோ என்று கவலைப்படுகிறவர்கள் உண்டு. இவர்களது மற்ற கோரிக்கைகளோடு அந்தச் செருப்பைப் பாதுகாக்கிற வேலையும் கடவுளுக்கு வந்து சேர்கிறது பாருங்கள். உடல் நலம் கருதி வீட்டுக்கு உள்ளேயே செருப்புப் போட்டுக் கொண்டு நடமாட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந்தக் காலத்தில் போய் திரைப்படக் காட்சிக்காக ஒரு கலைஞர் இப்படி உட்கார்ந்ததைப் பிரச்சனையாக்குகிறவர்களின் மன நலம் விசாரணைக்கு உரியது.

ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பாஜக வகையறாக்கள் நடத்துகிற கூட்டங்களின் மேடைகளின் பின்னணியில் கடவுள் உருவங்கள் வைக்கப்பட்டிருப்பதையும், தலைவர்கள் அந்தக் கடவுள்களுக்கு முதுகு காட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்தத் தலைவர்களில் வசதியாகக் கால் மேல் கால் போட்டுத்தான் உட்கார்கிறார்கள், அந்தக் கால்களில் செருப்பு அணிந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், கோயில் வாசலை விட, கூட்ட மேடை அருகில் செருப்பைக் கழற்றிப் போடுவது கொஞ்சமும் பாதுகாப்பில்லை (செருப்புக்கு) என்பது. அவர்களெல்லாம் கடவுளை அவமதிப்பவர்கள்தானா?

கோட்பாட்டுப்படி பார்த்தால் கடவுள் எங்கேயும் நீக்கமற நிறைந்திருப்பவராயிற்றே... அப்படியானால் எங்கேயுமே செருப்புப் போட்டு நடமாடக் கூடாதே! இதோ இந்தக் கட்டுரைக்கும் இதைப் படிக்கிற உங்கள் கண்களுக்கும் நடுவே கூட கடவுள் இருக்கிறார். எதற்கும், காலில் செருப்பு அணிந்திருந்தால் கழற்றி வைத்துவிட்டு தொடர்ந்து படியுங்கள்.

செருப்பு அணிந்தவர்கள், கழற்றி வைத்தவர்கள், நடைபாதைக் கடையில் கூட செருப்பு வாங்க இயலாதவர்கள், வார் அறுந்ததால் கைவிடப்பட்ட (கால்விடப்பட்ட?) ரப்பர் செருப்பை எடுத்து ஊக்கு குத்தி இணைத்துப் பயன்படுத்துகிறவர்கள் எல்லோரையும் தாங்குவது நம் பூமி. நம்பிக்கையாளர்கள் பூமியை பூமாதேவி என்றே வணங்குகிறார்கள். இனி இந்த பூமியின் மேல், அந்த ஊக்குப் போட்ட செருப்பைக் கூட அணிந்து நடக்கக் கூடாது என்பார்களா?

இவர்களுக்கு உண்மையாகவே கடவுளின் கண்ணியத்தைக் காப்பாற்றுவதில் அக்கறை இருக்கிறதா? அப்படியானால், கடவுளை அரசியலுக்கு இழுத்து தேர்தல் பிரச்சார வஸ்துவாகப் பயன்படுத்துவோர் மீதல்லவா கோபம் வரவேண்டும்? அவர்கள் பல மாநிலங்களிலும் இருக்கிறார்கள் என்பதால், எல்லா மாநிலங்களின் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடரலாம்.

பல தனியார் நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் சாமிப் படங்களைப் பயன்படுத்துகின்றன. லட்சுமியைச் சிதறடிக்கிற லட்சுமி வெடி சிவகாசி பட்டாசுத் தயாரிப்பில் முக்கிய இடம் பெறுவது. அதெல்லாம் கூடாது என்று சொல்வார்களா?

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி அண்மையில், மலம் அள்ளுவது போன்ற இழிவான தொழில்களில் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தள்ளிவிடப்படுவது பற்றிக் குறிப்பிடும்போது, அது ஒரு புனிதமான செயல் என்றாராம். அவர் மீதல்லவா வழக்குப் போட்டிருக்க வேண்டும் என்று நடிகர் சத்யராஜ் சரியாகத்தான் கேட்டிருக்கிறார். அது ஒரு புனிதமான செயல் என்பதால்தான் வாழை இலையைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தச் சொல்வதாக லோக குருக்கள் சொல்லக்கூடும். மோடி இதை இன்னும் அழுத்தமாகச் சொல்லட்டும், அந்தப் புனிதமான செயலைச் செய்ய நான் நீ என்று சங் பரிவார தலைவர்கள் முன் வருகிறார்களா என்று பார்ப்போம்.

கண்முன் வாழ்கிற மனிதர்கள் அவமதிக்கப்படுவதை விட, கற்பனைக் கடவுள்கள் அவமதிக்கப்படுவதைத்தான் மதவாதிகள் பெரிய பிரச்சனையாக்குகிறார்கள். தமிழக முதலமைச்சர் கடவுள் நம்பிக்கை தொடர்பான தமது சிந்தனையை வெளிப்படுத்தினால் அதற்காக தலையும் நாக்கும் பலி கேட்கிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து வழக்குப் பதிவு செய்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்தைத் திரிசூலத்தால் குத்திக் குதறிப்போட முயல்கிறார்கள். ஓவியரை நாட்டை விட்டே விரட்டுகிறார்கள். எழுத்தாளர் பேசும் கூட்டங்களில் கலவரம் செய்கிறார்கள். இதில் மத வேறுபாடே கிடையாது.

உண்மையில், செருப்போடு கால் மேல் போட்டு உட்கார்வது கடவுளுக்கு அவமதிப்பு அல்ல. இருபத்தோராம் நூற்றாண்டு நவீன காலத்தில் இதையெல்லாம் கூட விவகாரமாக்குவது, பன்முகப் பண்பாட்டின் விளை நிலமாகப் புகழப்படும் இந்த நாட்டிற்குத்தான் பெரும் அவமானம்.