Thursday 28 June 2012

உள்நாட்டு அரசியல் கொள்கைகளில் உலக நிதி நிறுவனங்களின் செல்வாக்கு


(பிணத்துககு காசோலை
கொடுத்த நேர்மை)

ஒரு பெரும் செல்வந்தர் மரணப் படுக் கையில் கிடந்தார். தனது நிர்வாகத்தில் உள்ள கோவிலின் பூசாரி, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர், தனது பணத்தைப் போட்டு வைத் துள்ள நிதிநிறுவன நிர்வாகி ஆகியோரை அழைத்திருந்தார். மூவரிடமும் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தார். “எந்த நேரத்திலும் நான் இறந்துவிடுவேன். வேறு யாரையும் நம்ப முடியவில்லை. அதனால்தான் இந்தப் பணத்தை உங்களிடம் கொடுத்து வைக்கிறேன். நான் இறந்ததும் என்னைப் புதைக்கும்போது நீங்கள் இந்தப் பணத்தையும் என் உடலோடு வைத்துப் புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,” என்று சொன்னார். சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். உடல் அடக்க நிகழ்ச்சிகள் முடிந்து திரும்பும்போது அந்த மூன்று பேரும் சந்தித்துக்கொண்டார் கள். முதலில் அந்தப் பூசாரி, “உங்கள் இரண்டு பேரிடமும் நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும். பெரியவர் கொடுத்த பணத்தில் 50 லட்ச ரூபாயை மட்டும்தான் அவருடைய உட லோடு வைத்தேன். மீதிப்பணத்தை, அவர் கட்டிய கோவிலை விரிவு படுத்துவதற்காக வைத்துக்கொண்டேன்,” என்றார். உடனே அந்த மருத்துவர், “நானும் உண்மையை ஒப்புக் கொள்கிறேன். 50 லட்ச ரூபாயைத்தான் நானும் கல்லறைக்குள் போட்டேன். மீதி 50 லட்சத்தை அவர் கட்டிய மருத்துவமனையில் புதிய கருவிகளை வாங்கி வைக்கப் பயன் படுத்தப்போகிறேன்,” என்றார். இருவரையும் கோபத்தோடு பார்த்தார் நிதி நிறுவன நிர்வாகி, “உங்களை நம்பியவருக்கு நீங்கள் நேர்மை யாக நடந்துகொள்ள வேண்டாமா? நான் உங்களைப் போல இல்லை. முழுத் தொகைக் கும் செக் எழுதி உள்ளே வைத்துவிட்டேனாக் கும்,” என்றார்.

நாட்டின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி கூறியுள்ள கருத்துக்களைப் படிக்கிற போது இந்தக் கதைதான் நினைவுக்கு வரு கிறது. பொதுவாக எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவராம் இவர். சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் நகரில், பெர் ஜாகோப்ஸன் அறக்கட்டளை சொற்பொழிவு-2012 நிகழ்ச்சி யில் “சமுதாயம், பொருளாதாரக் கொள்கைகள், நிதித்துறை” என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் ஆதிக் கத்தை அம்பலப்படுத்தினார். அவரது உரை யில் தெரித்த சில முக்கிய கருத்துகள் வருமாறு:

“உலக அளவிலான சில நிதி நிறுவன மலைகள் பல்வேறு நாடுகளின் மைய வங்கி களை விடவும் சக்தி வாய்ந்தவையாக இருக் கின்றன. சில பெரிய பன்னாட்டு வங்கிகள் பல நாடுகளின் அரசியல் பொருளாதாரத்தில் குறிப் பிடத்தக்க அளவுக்குத் தாக்கம் செலுத்து கின்றன.“வரியைத் தவிர்ப்பது தொடர்பான செயல் பாடுகளை மேற்கொள்ளவும், அதனால் ஆதாயம் பெறவும் பன்னாட்டு வங்கி நிறுவனங் களுக்கு வாய்ப்பு உள்ளது. இத்தகைய செயல் பாடுகள் காரணமாக சம்பந்தப்பட்ட நாடு களின் அரசியல் பொருளாதாரத்தில் அந்த நிறுவனங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.]“இன்றைய உலக நிதிச் சந்தை நிலவரத் தில் சில பெரும் நிதி நிறுவன மலைகள் மிகப் பெரியவையாக உள்ளன. ஏன், சில மைய வங்கிகளை விடவும் சக்தி வாய்ந்தவையாக வும் இருக்கின்றன.

“அண்மைக் கால ஆண்டுகளில், (பொரு ளாதார நெருக்கடிகளால்) பாதிக்கப்பட்ட நாடு களில் அரசியல் நடவடிக்கைகளுக்கு நிதி நிறுவனங்களின் பங்களிப்புகள் அதிகரித்து வந்துள்ளன என்பதைக் கிடைத்துள்ள ஆதா ரங்கள் காட்டுகின்றன. மேலும், அந்த நிதி நிறுவன மலைகள் தங்களுடைய சொந்த நலன் களுக்காக, அரசியல் நிர்வாகத்தில் மட்டு மல்லாமல், பெருந்தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்களிலும் தலையிடுகின்றன என்று தெரிகிறது.

“உலக நிதி ஆளுமைகள், நெருக்கமான தொடர்புகள் உள்ள சில அமைப்புகளில் செல் வாக்கு செலுத்துவது போட்டித் திறன் உள்ள சக்திகளை சீர்குலைக்கக்கூடும். நாடுகளின் பொருளாதார நிலைகளை மதிப்பிடும் நிறு வனங்களும், நிதிக் கணக்கு நிறுவனங்களும், சில முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனங்க ளோடு சேர்ந்து, ஒன்றுக்கொன்று தொடர்ச்சி யான கொடுக்கல் வாங்கல்களைச் செய்து கொள்கின்றன. இது சந்தையில் அந்தச் சில ஏகபோக அமைப்புகள் ஆளுமை செலுத்த இட்டுச் செல்கிறது.

“உலகளாவிய நிதிச் சந்தையின் மீதான நம்பிக்கை, குறிப்பாக பொருளாதாரத்தில் முன் னேறிய நாடுகளின் வங்கித் துறைகள் மீதான நம்பிக்கை அரிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், நிதி நிறுவனங்கள் பொருத்தமற்ற ஆதாயங்களை அனுபவிப்பதும், சில உலகளா விய நிதி நிறுவனங்கள் விசாரணைக்குரிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதும்தான்.

“பல நாடுகளின் நிதித்துறை ஒழுங்கு முறை ஆணைய அமைப்புகள் இப்படிப்பட்ட நிறுவனங்களின் மீது அபராதம் விதிக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் செய்த முறை கேடுகள் பற்றியோ, அதனால் பொதுமக்க ளுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றியோ எந்த விவரத்தையும் வெளியிடுவதில்லை. அது மட்டுமல்ல, எந்த நிறுவனங்களை அந்த ஒழுங்குமுறை அமைப்புகள் கட்டுப்படுத்த வேண்டுமோ, அந்த நிறுவனங்களின் ஆலோ சனைகளைத்தான் சார்ந்திருக்கின்றன.

“அத்தகைய ஒழுங்குமுறை அமைப்பு களிலும், அரசாங்கக் கருவூலத் துறைகளி லும், நிதியமைச்சகங்களிலும் பணியாற்று கிறவர்களுக்கு இந்த உலகளாவிய நிதி நிறு வனங்கள் மிக அதிகமான ஊதியத்தில் பதவி களை அளிக்கத் தயாராக இருக்கின்றன... நிதிச் சந்தையில் இப்படிப்பட்ட சில நிறுவனங்கள்தான் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதும், நிதி என்பது எந்த அளவுக்கு விரிவானதாக இருக்கிறது என்பதுமாகச் சேர்ந்து நடைமுறைகளிலும் விளைவுகளிலும் தாக்கம் செலுத்துகின்றன...”-

இவையெல்லாம் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருடைய கருத்துகள். மக்கள் நலத்தில் அக்கறையுள்ள பொருளாதார வல்லு நர்களும், இடதுசாரி சிந்தனையாளர்களும் நம் நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில், அதன் மூலம் நாட்டின் உயர் தன்னாளுமை உரிமையில் ஒரு அரிமானத்தை ஏற்படுத்துவதில் உலகளாவிய நிதி மூலதன சக்திகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடிகிறது என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாதத்திற்கு வலுச் சேர்க்கிறது ஒய்.வி. ரெட்டியின் பேச்சு. உலகச் சந்தை நிலவரத் தின்படி ஆடுவதையே பெருமைக்குரிய கடமையாக ஏற்றுச் செயல்படும் ஆட்சியாளர் களுக்கு இது உறைக்குமா?

(தீக்கதிர் 28.6.2012 இதழில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை)உள்