Thursday 7 February 2013

மூல முதல்வன்


பெண்ணும் வேதநூல்களைப்
படிக்கக்கூடாது என்றானாம்
தலைமுதல் கால்வரை
வர்ணம் பிரித்த பகவன்.

பெண்ணோ பொதுவில்
கருவிகள் இசைத்துப்
பாடக்கூடாது என்றானாம்
மார்க்கம் சொன்ன இறைவன்.

பெண்ணின் ஆசைப்பேச்சு
கேட்கக்கூடாது என்றானாம்
விலா எலும்பில்
அவளைச் செதுக்கிய கர்த்தன்.

போதனைகள் படித்ததில்
விளக்கங்கள் கேட்டதில்
புத்திக்குப் புரிந்தது-
கடவுளைப் படைத்தவன் ஆண்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன ஒரு அநியாயம்...?

-ஒரு உயிர்...