Tuesday 17 August 2010

செங்கோட்டைப் பேச்சு திண்ணைப் பேச்சுதானா?


“பேச்சுவார்த்தைதான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண ஒரே வழி... இந்தியாவின் ஜனநாயகத்துக்கு நாட்டின் எந்தவொரு பகுதி அல்லது எந்தப் பிரிவு மக் களின் பிரச்சனைகளையும் கையாள்கிற விசால குணமும் நெகிழ்வுத் தன்மையும் இருக் கிறது,” என்று அருமையான சொற்களால் கூறி யிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். காஷ்மீரிகளானாலும், வடகிழக்குப் பகுதியானாலும், நக்சலைட்டுகளானாலும் எந்தவொரு பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே தாம் விரும்புவதாக அவர் தெளிவானதொரு செய்தியை வெளியிட்டதாக ஊடகங்கள் புகழ்கின்றன. சரிதான், இந்தப் பிரச்சனைகளுக்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் தொடங்கப் போகின்றன என்று மனதில் நம்பிக்கை விரிய வில்லை. ஏனென்றால் அவர் பேசியது நாட்டு மக்களின் மிக உயர்ந்த பிரதிநிதித் துவ அமைப்பாகிய நாடாளுமன்றத்திலோ, அமைச்சரவைக் கூட்டத்திலோ அல்ல. ஆகஸ்ட் 15 அன்று தில்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றி உரையாற்றிய போதுதான் அவர் இப்படிக் கூறியிருக்கிறார்.

அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான விவகாரங்களுக்கு முறையான பேச்சுவார்த் தைகள் மூலமே சரியான தீர்வு காண முடி யும் என்றுதான் மார்க்சிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி இயக்கங்களும் ஜனநாயக அமைப்புகளும் எடுத்துரைத்து வந்துள்ளன. ஆனால் மத்திய அரசும், சம்பந்தப்பட்ட பல மாநில அரசுகளும்தான் பேச்சுவார்த்தை வழி முறைக்கு வர மறுக்கின்றன. பிரச்சனைக ளால் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டக் களத்திற்கு வருகிறபோது, அவர்களில் சிலர் தவ றான வழிகாட்டலால் வன்முறையில் இறங்கு வார்கள். சில நேரங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள், ஏன் காவல்துறையினரே கூட அப்படிப்பட்ட வன்முறைகளைத் தூண்டிவிடுவதுண்டு. இவர்களே வன்முறையில் இறங்கிவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தான் கலவரம் செய்ததாகப் பதிவு செய்வதும் உண்டு. கலவரத்தைச் சாக்கிட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் தொடுப்பதே நோக்கம். அந்தத் தாக்குதல்களும் இரண்டு வகைப்படும். ஒன்று, நேரடியான தடியடி, துப்பாக்கிச் சூடு போன்ற தாக்குதல்கள்; இரண்டு, வழக்கு, வாய்தா போன்ற தாக்குதல்கள். எங்கே போயிற்று பேச்சுவார்த்தை வழிமுறை?

இன்று பற்றியெரிந்துகொண்டிருக்கும் காஷ்மீர் பிரச்சனையின் அடிப்படை என்ன? அந்த மக்கள் தொடர்ந்து ஆட்சியாளர் களால் வஞ்சிக்கப்பட்டதுதான் அவர்கள் தனி மைப்பட்டதாக உணர்வதற்கு, கணிசமான மக்கள் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பு வதற்கும் இட்டுச் சென்றது. இந்தியா விடு தலையடைந்தபோது காஷ்மீர் இந்தியா வுடன் இணைந்திருக்கவில்லை, அது தனி யொரு அரசாகவே இருந்தது என்ற உண் மையே கூட பலருக்கும் தெரியாது. இந்திய மாநிலங்களில் ஒன்றாக இணைவதற்கு ஒப்புக்கொண்டபோது அன்றைய இந்திய அரசு செய்துகொண்ட உடன்பாடு, அந்த உடன்பாட்டின்படி காஷ்மீருக்கு அளிக்கப் பட்ட தனித்தகுதிகள் நேர்மையின்றி மீறப் பட்டது போன்ற விவகாரங்கள் நாட்டின் இதரபகுதி மக்களுக்குத் தெரியாது. இந்திய அரசு அதையெல்லாம் சொல்வதில்லை. மாறாக, காஷ்மீருக்கு மட்டும் ஏன் சிறப்புச் சலுகைகள் என்கிற பாஜக பாணி வாதம்தான் பரப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி சில அமைப்புகள் தங்களின் பின்னால் வரக் கூடிய இளைஞர்களைத் திசைதிருப்பித் தூண்டிவிடுவதும் நடக்கிறது. இப்படிப்பட்ட அத்துமீறல்களின் தொடர்ச்சிதான் காஷ் மீரின் இன்றைய நிலைமை. ஆனால் அந்த மக்களின் பிரதிநிதி களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? அந்த மக்க ளையே எதிரிகளாக்கி அந்த மண்ணையே ஒரு போர்க்களமாக்கி பாதுகாப்புப் படை யினரின் துப்பாக்கிச் சூடு, இளைஞர்கள் பலி என்ற நிகழ்வுகளை தினசரிச் செய்தி யாக மாற்றியது யார் குற்றம்? காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பாதுகாக்கப் படும், அதிகபட்ச சுயாட்சியுடன் கூடிய ஒரு புதிய அரசியல் கட்டமைப்பு ஏற்படுத்தப்படும், அது பற்றிப் பேசலாம் என்று உறுதியளித்து அழைப்பதற்கு மாறாக, பேச்சுவார்த்தைக்கு வருவதையே தடுக்கிற கெடுபிடிகள் ஏன்?

வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனை யும் இப்படித்தான். மணிப்பூர் செல்லும் சாலைகள் மறிக்கப்பட்டிருப்பதால் உயிர் காக்கும் மருந்துகள் கூட அந்த மக்களைச் சென்ற டைய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தேசிய அளவில் உண்மையான கூட்டாட்சி யும், சரியான மாநில சுயாட்சியும் இணைந்த அரசமைப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற வாக் குறுதிதான் இந்த நிலைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அடிப்படைத் தேவை. அதற்கான பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கத் தடையாக இருப்பது என்ன?

நக்சலைட் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதும், வனப்பகுதி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளோடு இணைந்ததுதான். நக்சலைட்டுகள் தற்போதைய சூழலைத் தங்களது வன்முறை அரசியலுக்கு சாதகமாகக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டு மானால், வன மக்களின் நிலங்களுக்குள் கார்ப்பரேட் புல்டோசர்கள் புகுந்து வேட்டையாட அனுமதிக்கிற கொள்கையை முதலில் மத்திய அரசு கைவிட்டாக வேண்டும். அதன் பின் ஜனநாயக அமைப்புகளோடு நேர்மையான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண் டும். ஆனால், மேற்கு வங்கத்தில், வன மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண விடாமல், இடது முன்னணி அரசுக்குத் தலைவலி ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் உறவும் வைத்திருக்கிற திருணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மன்மோகன் சிங் அமைச் சரவையில் முக்கிய இடத்தில் இருக்கிறார்! அவருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி வன்முறை உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டியதுதானே!

இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர் பாகப் பேச்சுவார்த்தை நடத்துவது இருக்கட் டும், முதலில் தனது அரசின் பல்வேறு நட வடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசு வதற்கு முன்வரட்டும்! இந்தியச் சந்தையை அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்கு, குறிப்பாக இந்தியாவின் எளிய விவசாயிகளைத் தெருவில் நிறுத்துவதற்கு வழிசெய்யும் சுதந்திர வர்த்தக உடன்பாடு, அமெரிக்காவுடனான அணு விபத்து இழப் பீடு ஒப்பந்தம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அந்நிய நேரடி முதலீடுகள்... இன்ன பிற சங்கதிகள் குறித்து மக்களின் பிரதி நிதிகள் சபையில் சுதந்திரமாக விவாதிக்க விடுவதில் என்ன தயக்கம்?

ஆகவே பிரதமர் அவர்களே, மக்களின் பிரதிநிதிகள் சபையில் பேசுவதற்குத் தயாராகுங்கள், நீங்கள் சொன்ன பிரச்சனைகள் தொடர்பானவர்களோடும் பேச்சுவார்த்தை நடத்துங்கள். இதற்கான முயற்சிகளைத் தொடங்காத வரையில், வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாக மட்டும் அணுகிடும் வரையில் உங்கள் செங்கோட்டை மேடைப் பேச்சு வெறும் திண்ணைப்பேச்சாகவே எடுத்துக்கொள்ளப்படும்.

No comments: