Friday, 15 May 2026

சுருக் செய்திகள் நறுக் கருத்துகள்



“காங்கிரஸ், அதிமுக பிரிவினரின் பதவிக் கோரிக்கைகளால் விஜய் அமைச்சரவை அமைப்பதில் தாமதம்

-அரசியல் மரியாதையைத் தந்த கட்சிகளுக்கு அப்பால்  புதுசா அவங்களா வந்து ஆதரிக்கிறவங்களுக்கு நன்றி மட்டும்தான், பதவிப் பசிக்கெல்லாம் இரை போட மாட்டோம்னு அறிவிக்கிற நேர்மையை ஜனநாயகன்ட்ட காணோமே! சரி, அந்தச் செய்திக்குப் பக்கத்துல இருக்கிற தலைப்பையும் வாசியுங்க...

“அமைச்சரவை அமைப்பதில் தாமதத்தால் குடிமைத் திட்டங்கள் முடக்கம்”

-நேர்மையா அப்படி அறிவிச்சிருந்தாருன்னா இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காதுல்ல... இப்ப பாருங்க, அமைச்சர் பதவி கேட்கிறவங்க எந்தத் துறை வேணும்னும் நெருக்கடி கொடுப்பாங்கல்ல...  எப்படியோ மக்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் ரொம்ப நாள் முடங்காம இருந்தா சரி... அடுத்த செய்தி?

“ஊழலை ஒழிக்கக முதலமைச்சர் மூன்று மாத காலம் கெடு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா"

-வாங்குறதெல்லாம் அதுக்குள்ள வாங்கி முடிச்சுக்குங்கன்னு சொல்றதா ஆகிடக் கூடாது!அடுத்தது?

பாலின சமத்துவம் என்பது மத உரிமைகளுக்குக் கிடையாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்"

-பெண்களைப் பின்னால் தள்ளி ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கிற பாலினப் பாகுபாட்டுக்கு அடைக்கலம் தர்றதே மத ஏற்பாடுகள்தான். மத நம்பிக்கைகள்ல தலையிட முடியலைன்னு சொன்னா புரிஞ்சிக்கிடலாம். தலையிட மாட்டோம்னு சொன்னா, இந்த அநீதிக்கு அரசாங்கமும் அடைக்கலம் கொடுக்குதுன்னுதான் அர்த்தம். உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்புச் சொல்லுதுன்னு பார்ப்போம்....

“10 நாள் புதிர் விலகியது: கேரள முதலமைச்சர் பொறுப்புக்கு சதீசன் தேர்வு”

-முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி அரசுகள் கொண்டுவந்த பல அரசியல் பண்பாடுகளையும் நடைமுறைகளையும் காங்கிரஸ் அரசுகள் குலைக்க முயன்றதில்லை. இவரும் அப்படியே தொடர்கிறாரான்னு பார்ப்போம்”

[0]

-காலை நடை நிறைவின் பூங்கா உரையாடலில், ஒரு நண்பர் பத்திரிகைச் செய்திகளின் தலைப்புகளை மட்டும் வாசிக்க வாசிக்க, நான் உடனுக்குடன் வெளிப்படுத்திய கருத்துத் தெறிப்புகள் இவை. புனைவுப்படம்: ஜெமினி ஏஐ

No comments: