Sunday 9 September 2007

பள்ளிக்கூடம் திரைப்பட விமர்சனம்


பள்ளிக்கூடம்


ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் சண்முகங்களையும் தனலட்சுமிகளையும் வெளிக்கொணர்வதில் ‘அழகி’ படத்தில் பெரும் வெற்றி பெற்ற தங்கர் பச்சான் சில படங்களின் இடைவெளிக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே போன்ற வெற்றியைச் சாதித்திருக்கிறார். அந்தப் படத்தில் அதற்கான வாகனமாக இருந்த பள்ளிக்கூடம் இந்தப்படத்தில் இலக்காகவே ஆகியிருக் கிறது. நண்பர்கள் சந்தித்துக் கொள்கிறபோது தங்களது கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கிற கதை புதிதல்ல. அதை ஒரு பொது நோக்கத்தோடு இணைத்திருப்பதில் தங்கர் வேறுபடுகிறார்.


இரவில் மாடுகள் ஒதுங்கும் இடமாக, மழைக்காலத்தில் எல்லோரையும் நனைய விடுகிற அள வுக்கு ஓடுகள் நொறுங்கிய கூரையோடு அந்தப் பள்ளிக்கூடம் பல உண்மையான கிராமத்துப் பள்ளிகளின் லட்சணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.


ஏற்கெனவே அந்த இடத்தைப் பள்ளிக்காக வழங்கிய ஊர்ப் பெரிய மனிதரின் மகன் அந்த இடத்துக்குச் சொந்தம் கொண் டாட, அரசின் கல்வித் துறையிலிருந்தும் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடிவிட ஆணை வருகிறது. பள்ளியை மீட்க ஆசிரியர்களும் ஊர்ப் பொதுமக்களும் முயற்சியெடுக்கிறார்கள்....இந்தப் பொதுப் பிரச்சனையோடு, பள்ளிக்கூடத் தரைகளிலும் பெஞ்சுகளிலும் மைதானத் திலும் மரங்களிலும் கலந்திருக்கக்கூடிய காதல் கதைகளையும், அதற்கு இணையான நட்புக் கதைகளையும் கோர்த்திருக்கிறார் தங்கர். அதனால் இந்தப் பள்ளிக்கூடம் உயிர்த்துடிப்போடு இருக்கிறது.


சட்டையில் பட்டன் இல்லாமல் முள் குத்திக் கொள்ளும் குயவர் மகன் வெற்றிவேல், வகுப்பி லேயே சிறந்த மாணவன். அவனுடன் நேசமாகப் பழகும் கோகிலா, பெரிய மனிதக் குடும்பத்தின் இன்னொரு வாரிசு. இவர்கள் பிரிய நேரிடும் சூழல் பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான். பின்னர் மாவட்ட ஆட்சியராகும் வெற்றிவேல், நடந்தது என்ன என்பதை விசாரித்து அறிய முடி யாத அளவுக்கு, அன்றைய மோதலில் தனது தந்தையின் மரணத்தால் மனம் கொந்தளித்துப் போனவனாக இருக்கிறான். இதே போல் சினிமா இயக்குநராகும் முத்து, படிப்பு வராமல் கிராமத்திலேயே தேங்கிவிடும் குமாரசாமி ஆகிய நண்பர்களின் கதைகளும் சொல்லப்படுகின்றன.


குமாரசாமிக்கு படிப்பு வர வில்லை என்பதால் அவனது தகப்பன் அழுது புலம்புவதாகக் காட்டியுள்ள தங்கர், இப்படிப்பட்ட வறுமைக் குழந்தைகளின் மூளையில் ஏன் படிப்பு ஏறுவதில்லை என்ற சமூகப் பொருளாதாரப் பார்வையையும் தொட்டிருந்தால் படம் மேலும் அழுத்தம் பெற்றிருக்கும்.


பழைய மாணவர்கள் படையெடுத்து, விழா எடுத்து, நினைவுகளைப் பரிமாறிக் கொள்வ தோடு பள்ளியின் மீட்சிக்குத் தேவையான நிதியையும் வழங் குகிறார்கள். கற்பனையில் தான் இப்படி நடக்கும் என்றா லும் நல்ல நோக்கமுள்ள கற் பனை. படத்தில் கல்வி அதி காரி (இயக்குநர் வெ. சேகர் இப்பாத்திரத்தில் நடித்திருக்கி றார்), தாம் படித்த பள்ளிக் கூடத்திற்கும் இப்படி ஏதேனும் செய்ய விரும்புவதாகக் கூறு வதுபோல், படம் பார்க்கிற பல ருக்கும் இதுபோன்ற உணர்வு ஏற்படுத்தக்கூடும். அத்துடன், ஒவ்வொருவரையும் தமது பள்ளிக்காலத்திற்குப் பயணம் மேற்கொள்ள வைத்து மனதில் ஒரு பசுமையைப் பதிக்கிறார் தங்கர். அதே நேரத்தில், பள்ளியை மீட்பதில் அரசின் பொறுப்பை வலியுறுத் தும் போராட்ட உணர்வுக்கு மாறாக, இப்படிப் பழைய மாண வர்களின் நன்கொடையால் பள்ளி பிழைப்பதாகக் காட்டு வது சரியான இலக்கிலிருந்து தடம் புரள்வதாகிவிடுகிறது.


பள்ளியை மீட்க முயலும் படிக்காத குமாரசாமியாக தங்கர் பச்சான் தமது நடிப்பில் அந்த அப்பாவித்தனத்தை அழகாக வெளிப்படுத்தியிருக் கிறார்.


திரைப்பட இயக்குந ராக, இயக்குநர் சீமான் நண்ப னின் வறுமை கண்டு உருகும் போது உருக்குகிறார். மாவட்ட ஆட்சியராகிவிடும் வெற்றி வேலாக நரேன் சீரான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தனது வாரிசுரிமைச் சொத்தை மட்டு மல்லாமல், காதலை மீட்பதிலும் கையறு நிலையில் நிற்கும் கோகிலாவாக சினேகா. அந்தப் பாத்திரத்தை இன்னும் முழுமைப்படுத்த இயக்குனர் முயன்றிருக்கலாம்.


“பள்ளிக்கூடம் போய்ப் பாரு” பாட்டு நீண்ட நாட்கள் மனதில் ஒலிக்கும். பரபரப்பான திடீர்த் திருப்பங்கள் இல்லா மலே படத்தின் உச்சகட்டக் காட்சி சுவாரசியமாக அமைந் திருக்கிறது. கிராம வாழ்க்கை சார்ந்த ஆழமான சமூக அல சல்கள் இல்லாவிட்டாலும் பள் ளிக்கூடத்தின் படிப்பினை யைப் புறக்கணிப்பதற்கில்லை.


-அ.குமரேசன்

No comments: