Friday 23 December 2011

உயிர் வாழ்வதன் உள் விசை எது?


பூமியில் பிறக்கிறோம். எப்படியெப்படியோ வாழ் கிறோம். இறுதியில் செத்துப்போகிறோம். விலங்கு கள் பறவைகள் பூச்சிகள் தாவரங்கள் என்று எல்லா உயிர்களுக்கும் இதுதான் நிலைமை. இப்படிப் பிறந்து வாழ்ந்து மடிவதன் அர்த்தம்தான் என்ன?
எவ்வளவு பெரிய தத்துவக் கேள்வி! இந்தக் கேள்விக்கு ஒரு திரைப்படத்தால் பதில் சொல்ல முடியுமா? முடியும் என்று என்று மெய்ப்பிக்கிறது ட்ரீ ஆஃப் லைஃப் (வாழ்க்கை மரம்):

இருட்டில் எங்கோ நெருப்புச் சுடர் போன்ற தொரு புதிரான ஒளி படபடவென்று மின்னுகிறது.

1960ம் ஆண்டுகளின் நடுக்கட்டம். ஓ பிரை யன் மனைவிக்கு ஒரு தந்தி வருகிறது. அதைப் படித்து அவள் நொறுங்கிப்போகிறாள். 19 வயது மூத்த மகன் ஜேக் இறந்துவிட்டான் என்று அந்தத் தந்தி கூறுகிறது. குடும்பம் துயரத்தில் மூழ்குகிறது. நிகழ்காலம்: பிரையன் தம்பதியின் இரண்டா வது மகன் ஜேக் ஒரு கட்டடக் கலை வரைவாள ராகத் தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கிறான். ஒரு கட்டடத்தின் முன்பாக மரம் நடப்படுவதைப் பார்க் கிற அவனுக்கு, 1950களில் ஒரு சிறுவனாக இருந்த போது தானும் தன் அண்ணனும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வருகிறது...
பேரண்டம் உருவாகிறது. அணுக்களின் ஈர்ப் பில் நட்சத்திரங்களும் கோள்களும் உருவாகின் றன. பூமி உருவாகிறது. அதில் எரிமலைகள் வெடிக் கின்றன. நுண்ணுயிர்கள் பரிணமிக்கின்றன. எலாஸ்மோச ரஸ் என்ற கடல் வாழ் விலங்கு ஒன்று இடுப் பில் காயத்து டன் கடலுக் குள் செல்கி றது. காட்டுக் குள் ஒரு இளம் பராசாரோலோ பஸ் (டைனசோர் வகையைச் சேர்ந்த விலங்கு) தன்னை வேட்டையாட முயலும் மற்ற விலங்கு களிடமிருந்து தப்பித்து ஒடுவதில் களைப் படைந்து ஒரு நதிக்கரையோரமாக விழுகிறது. ஓர்னித்தோமிமஸ் என்ற மற்றொரு விலங்கு இந்த இளம் விலங்கை பரிசீலிக்கிறது. அதை விழுங்க லாம் என்று கழுத்தில் வாய்வைக்கிறபோது, அது இன்னும் உயிருடன் துடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டுவிடுகிறது...


டெக்ஸாஸ் மாநிலத்தின் வாக்கோ நகரில் இளம் பிரையன் தம்பதி வாழ்கிறார்கள். பதின்பரு வத்தை அடையும் மூத்தவன் ஜேக், எந்தப்பாதை யைத் தேர்ந்தெடுப்பதென்று குழம்புகிறான். கனிவும் கட்டுப்பாடும் கொண்டவளும், உலகத்தை அதிச யித்து ரசிக்கத்தக்க ஒன்றாகக் குழந்தைகளுக்குக் காட்டுகிறவளுமான தனது தாயை அவன் கரு ணைப்பாதையின் அடையாளமாகப் பார்க்கிறான். அதிகாரமும் எளிதில் கோபப்படுகிற குணமும் கொண்ட தந்தையை கடுமைப் பாதையின் அடை யாளமாகப் பார்க்கிறான். மகன்களை பிரையன் நேசித்தாலும், உலகம் சுயநலமும் சுரண்டலுமாய் நிறைந்திருக்கிறது என்று கருதுகிற அவன், மகன் களை அதற்கேற்பத் தயார்ப்படுத்த முயல்கிறான். குழந்தைகளைக் குழந்தைகளாக நடத்தாமல் வளர்ந்தவர்களிடம் எதிர்பார்க்கிற முதிர்ந்த செயல் களை வற்புறுத்துகிறான். சாப்பாட்டு மேசையில் தன்னிடம் கூட அவர்கள் ஒரு விசுவாசமான ஊழி யர்கள் போலப் பணிவுடன் நடந்துகொள்ள வேண் டும் என கட்டாயப்படுத்துகிறான். சரியாக நடந்து கொள்ளாவிட்டால் அறையில் போட்டு அடைக் கிறான். தாய் அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடிகிறது. (அமெரிக் காவிலும் தாய்மார்கள் நிலை இதுதானா?) அவன் இல்லாத நேரத்தில் ஆறுதலாக அணைத்துக் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் கணவனோடு மோதவும் துணிகிறாள்...

ஒரு இசைக்கலைஞராக வாழ விரும்பி, பொறி யியலாளராக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பதிவு செய்து செல்வம் சேர்க்கும் கனவில் இருக் கிறவன் பிரையன். ஒரு கோடை காலத்தில் அவன் தனது கண்டுபிடிப்புகளை வர்த்தகரீதியாகக் கொண்டுசெல்வதற்காக உலகப் பயணம் மேற் கொள்கிறான். அந்த நாட்களில் மகன்கள் விடு தலை பெற்றதுபோல், தாயின் தடையற்ற அன்பை அனுபவிக்கிறார்கள். மூத்தவன் ஜேக், தெருவில் மற்ற சிறுவர்களோடு சேர்ந்து சுற்றும்போது கண் ணாடி சன்னல்கள் மீது கல்லெறிகிறான். விலங்கு களைத் துன்புறுத்துகிறான். பக்கத்து விட்டுக்குள் நுழைந்து, அந்த வீட்டுப் பெண்ணின் உள்ளாடை யைத் திருடி வருகிறான். பின்னர், தன் செயல் களுக்காக வெட்கப்படும் அவன், திருடி வந்த உள் ளாடையை ஆற்றில் வீசுகிறான்.

பிரையன் தனது கண்டுபிடிப்புகளை விற்க முடியாதவனாகத் திரும்பி வருகிறான். அவன் பணியாற்றுகிற நிறுவனத்தின் தொழிற்சாலை மூடப்படுகிறது. நிர்வாகம், அவனைத் தொடர்ந்து வேலையில் வைத்துக்கொள்ள வேண்டுமானால், இடமாறுதலுக்கு அவன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களைச் சிந்திக்கிற அவன், தான் நல்லவ னாக வாழ முடிந்திருக்கிறதா என்று யோசிக்கி றான். சிறுவன் ஜேக்கிடம், முன்பு கடுமையாக நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவிக்கிறான்...

எதிர்காலம். லட்சக்கணக்கான ஆண்டுகள் கழித்து, செந்நிறமாக மாறி எரியும் பூமி, பின்னர் குளிர்ச்சியடைந்து உயிரற்ற கோளாகிறது. சூரியனும் இப்போது வீரியமற்ற ஒரு சிறிய வெள்ளைப் பந்தாக மாறியிருக்கிறது...
நிகழ்காலம். பெரியவனாகிவிட்ட இரண்டாவது மகன் ஜேக் அலுவலகத்தில் வேலை முடிந்து புறப் படுகிறான். நவீன மின்தூக்கியின் கண்ணாடி வழியே வெளியே தெரியும் கட்டடக் காட்டைப் பார்த் துக்கொண்டே கீழிறங்கும் அவனுக்கு பாறைகள் நிறைந்த வட்டாரத்தில் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. முன்னால் ஒரு பெண் நடந்துசெல்கிறாள். ஒரு பாறையின் மேல் ஒரு மரக் கதவு தெரிய, அதன் வழியாக வெளியேறுகிறான். அங்கே ஒரு மணல் மேட்டில் தனது நினைவில் இருக்கிற அனைவரும் இருப்பதைப் பார்க்கிறான். இவன் வருவதைப் பார்த்து தந்தை பிரையன் மகிழ் கிறான். இவன் இறந்துபோன மூத்தவனை நினை வூட்ட, தாய் மனம் நெகிழ்ந்து அணைத்துக்கொள் கிறாள். அந்த மணல்மேட்டில் இப்படிப் பல பேர்...
ஜேக்கின் மனக்காட்சி மறைகிறது. புன்முறு வலோடு அவன் அலுவலகக் கட்டடத்திலிருந்து வெளியேறுகிறான்.

இருட்டில் அந்தப் புதிரான சுடரொளி இன்னும் படபடத்துக்கொண்டிருக்கிறது.

பேரண்டம், பால்வெளி மண்டலம், பூமி, உயிர் கள் என அனைத்துக்கும் ஈர்ப்பு மையம் அன்புதான் என்று - எந்த இடத்திலும் வசனமாகச் சொல் லாமலே - உணர்த்துகிறது படம். அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும் திரைக் கதை எழுத்தாளரும் தயாரிப்பாளருமான டெரேன்ஸ் மாலிக் இயக்கிய படம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவின் மிக உயர்ந்த பால்மே டீ ஓர் விருது உள் பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் இந்தப் படம் பெற்றுள்ளது. பிராட் பிட், சீன் பென், ஜெசிகா சேஸ்டைன் உள்ளிட்ட முன்னணி ஹாலிவுட் நடி கர்கள் நுட்பமான உணர்வுகளை நுட்பமாக வெளிப் படுத்தி நடித்துள்ளனர்.

திரைப்படக் கலையை ஒரு தத்துவ அலசலுக்கு உள்ளாக்க முடியும் என்று காட்டுகிற இந்த மாறுபட்ட படத்தை, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கம் சென் னையில் நடத்திய உலகத் திரைப்பட முகாமில் காணும் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பல காட்சிகளைப் போலவே கவித்துவமான அனுபவம் அது.

3 comments:

திசைசொல் said...

இந்த படத்தை காணும் பேறு எனக்கும் வாய்த்தது.உண்ரக்கூடியதான கலைபடைப்பு இது.அருமையான சித்திரிப்பு அ.கு.தலைப்பு கவித்துவம்

Anonymous said...

அருமையான கலைத்துவமான படைப்பு.
நன்றி அய்யா பகிர்விற்கு!
http://atchaya-krishnalaya.blogspot.com

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமையான பட அறிமுகம். நன்றி.